Close
மார்ச் 12, 2026 6:55 மணி

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ. 3,322 கோடி கடன் உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், சிறந்த மகளிர் குழுவினருக்கு மணிமேகலை விருதினை, மத்தியக்கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ. 3,322 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார் எம்.பி., தெரிவித்தார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நாக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

மத்தியக்கூட்டுறவு வங்கி சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவில் கலந்துகொண்டு சிறந்த மகளிர் குழுவினருக்கு மணிமேகலை விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 13,179 மகளிர் குழுக்களில் 1,47,511 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு வங்கி கடன் ரூ.3,300 கோடி, சமுதாய முதலீட்டுக் கடன் ரூ.14.80 கோடி, சுழல்நிதி ரூ.2.36 கோடி, வாழ்வாதாரநிதி ரூ.2.79 கோடி, வட்டார வணிக வளமையம் மூலம் ரூ. 2.50 கோடி கடனுதவி என, மொத்தம் 3,322,45 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் அனைவரும் சமூக பொறுப்பாளர்களாக இருக்கவேண்டும். 20 மகளிர் கொண்ட குழு 100 மகளிர் கொண்ட கூட்டமைப்பாக மாறவேண்டும். இந்தியாவிலேயே முதன்மையாக, மகளிருக்காக தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது தமிழக அரசு பெண்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்ரி, உதவி திட்ட அலுவலர்கள் மாலதி, பபிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top