Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா

ஈரோடு

அந்தியூர் அரசு கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது .

விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஈ. தமிழ்மணி (முழுக்கூடுதல் பொறுப்பு )தலைமை வகித்தார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வ . கிருஷ்ணன் பங்கேற்று  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார் .

அவர் தனது உரையில், கல்வியின் இன்றியமையாமை குறித்தும் ,கல்வி தான் அறியாமையை நீக்கி அறிவை வளர்த்து சமூகம் உயர்த்தும் சிறந்த கருவி என்பது குறித்தும் சிறப்பான முறையில் உரையாற்றினார். மேலும் பட்டங்கள் பெற்ற மாணவர்களை வாழ்த்தினார்.

2017 மற்றும் 2018  -ஆம் கல்வியாண்டுகளில் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த ஐந்து துறைகளின் 241 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். தமிழ்த்துறையின் துறைத்தலைவர் முனைவர் அ.வ யூனஸ்(பொறுப்பு), ஆங்கிலத்துறையின் துறைத்தலைவர் முனைவர் ஈ . தமிழ்மணி (பொறுப்பு ).

கணிதவியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் ஈ . தமிழ்மணி,  கணினி அறிவியல் துறையின் துறைத்தலைவர் த .வரதராஜன், வணிகவியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் ஆ . நாகேந்திரன்  உள்பட எட்டுத் துறையின் கெளரவ விரிவுரையாளர்களும் , உதவிப் பேராசிரியர்களும் பங்கேற்றனர். விழாவில் பட்டங்கள் பெற்ற அனைத்துத் துறை மாணவர்களும் மனமகிழ்ச்சியோடு பட்டங்கள் பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top