வாடிப் பட்டி:
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை மேதமை நான்காம் ஆண்டு மாணவி சி. கீர்த்திஸ்வரி கிராம தங்கல் அனுபவ திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி யில் மண்ணின் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்தும் பாஸ்போ பாக்டீரியாவை பற்றி, விவசாயிகளிடையில் செயல் விளக்கம் அளித்தார்.
இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டுக்
கொண்டனர்.