திருமங்கலம்:
மதுரை, திருமங்கலத்தை அடுத்த சாத் தங்குடியில் திருமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் சேடபட்டி மணிமாறன் அறிவுறுத்தலின் படி, நடைபெற்ற இந்த கூட்டத்திற்க்கு ,கிழக்கு ஒன்றியச் செயலாளர் தங்கபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தொகுதி பொறுப்பாளர் அலாவுதீன், தலைமை கழக பேச்சாளர் எழும்பூர் கோபி திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை எடுத்து கூறி பேசினர்.
இந்த கூட்டத்தில், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா, வக்கில் இன்பம் கிழக்கு ஒன்றிய நிர்வகிகள் ரஞ்சித் குமார், ராஜேஸ்வரி சந்திரன், சுங்குராம்பட்டி விஜய், மேலக்கோட்டை கோபி, காண்டை முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.