Close
செப்டம்பர் 19, 2024 8:51 காலை

புதுக்கோட்டைக்கு ரயிலில் வந்த 724 டன் யூரியா உரம்

புதுக்கோட்டை

சம்பா சாகுபடிக்கா தூத்துக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு ரயிலில் வந்த யூரியா உர மூட்டைகளை ஆய்வு செய்த வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி

சம்பா சாகுபடிக்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவையான யூரியா உரம் 724 மெட்ரிக் டன்கள்   தூத்துக்குடி யில் இருந்து சரக்கு இரயில் மூலம் புதுக்கோட்டை வந்ததை ரயில் நிலையத்தில்  புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மா. பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் வேளாண் இணை இயக்குநர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா 3471 மெட்ரிக் டன்கள், டிஏபி 1237 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 862 மெட்ரிக் டன், காம்ளக்ஸ் 5694 மெட்ரிக் டன்களும் இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியிலிருந்து தற்போது ஸ்பிக் யூரியா 724 மெட்ரிக் டன்கள், மேலும் காம்ளக்ஸ் 502 மெட்ரிக் டன்கள்இ சூப்பர் 63 மெட்ரிக் டன்கள் ஆகியன இரயிலில் புதுக்கோட்டை வந்து சேர்ந்தது.  இங்கிருந்து புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு உரம் அனுப்பி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 694 மெரிக் டன்கள் யூரியா, 502 மெட்ரிக் டன்கள் காம்ளக்ஸ் உரம் 53 மெட்ரிக் டன்கள் சூப்பர் உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உரம் தங்கு தடையின்றி கிடைத்திடவும், உரிய விலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுத்திடவும், வேளாண்துறை மூலம் அவ்வப்போது உர ஆய்வாளர்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லரை உர உரிமை தாரர்கள் உரக்கட்டுப்பாடு ஆணை 1985 -இன்படி உள்ள விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்பக் கூடாது. உரங்களை, உர மூட்டையின் மேல் காணப்படும் அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்தாலோ, விற்பனை உரிமத்தில் உரிய அனுமதியின்றி பெறப்பட்ட நிறுவனத்தின் உரங்களையோ, உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடத்தில் இருப்பு வைத்து விற்னை செய்தாலோ உர உரிமம் இரத்து செய்யப்படும்.

விவசாயிகள் உரம் வாங்க செல்லும்போது தங்கள் சாகுபடிக்கு தேவையான உரங்களை தங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளுமாறும், கட்டாயமாக உரங்களுக்கான ரசீதுகளையும் கேட்டு பெற்றுக் கொள்ளுமாறும்  அறிவுறுத்தப்படுகிறது.

எனவேஇ புதுக்கோட்டை மாவட்ட சில்லரை உர விற்பனை யாளர்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி, உர விற்பனை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆய்வின்போது குறைபாடுகள் ஏதும் கண்டறியப்பட்டால் உர உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மா. பெரியசாமி தெரிவித்தார்.

ஆய்வின் போது, தரக்கட்டுப்பாடு வேளாண் உதவி இயக்குநர் மு. மதியழகன், தரக்கட்டுப்பாடு வேளாண் அலுவலர் சி. முகமது ரபி, மற்றும் ஸ்பிக் நிறுவன அலுவலர்களும் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top