Close
மே 22, 2025 11:08 மணி

சிவகங்கையில் வரும் 24 -ல் விவசாயிகள் குறை கேட்பு முகாம்

சிவகங்கை

சிவகங்கையில் வரும் 24 -ல் விவசாயிகள் குறை கேட்பு முகாம் நடைபெறவுள்ளது

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்; வருகின்ற 24.01.2023 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்; வருகின்ற 24.01.2023 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10  மணியளவில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி  தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top