Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி… 9 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ள வேளாண்துறை திட்டம்

புதுக்கோட்டை

நெல் பயிருக்குப்பின் பயறு சாகுபடி

நெல்லுக்குப் பின் பயறு சாகுபடியை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ள  வேளாண்துறை  திட்டமிட்டுள்ளது..

புதுக்கோட்டை மாவட்டத்தில், நடப்பாண்டு சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர், அறுவடை பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நெல் அறுவடைக்குப் பின், உளுந்து பயிர் சாகுபடி செய்து, உபரி வருமானம் பெற்றிட விவசாயிகள் முன்வரவேண்டுமென  புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் அவர் கூறியதாவது: 2022-23 ஆம்  ஆண்டில்  நெல்லுக்குப் பின் பயறு சாகுபடித் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில், 9000 ஏக்கரில் நெல் அறுவடை வயல்களில், உளுந்து பயிர் சாகுபடி செய்திட, திட்டமிடப்பட்டு, அதற்கான விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள், 50 சத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.நெல் சாகுபடிக்கு பின் பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்வதால், குறுகிய காலத்தில் அதாவது 65 நாளில், பயிர் அறுவடைக்கு வந்து, மகசூலைத் தந்து, விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.

பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்வதால், ஆகாயத்திலுள்ள தழைச்சத்து, பயிரின் வேர் முடிச்சுகளில் சேமிக்கப்படுகிறது. இதனால் பயிரும் நன்கு வளரும், சாகுபடி நிலமும் வளமடை கிறது. இதனால் அடுத்து சாகுபடி செய்யும் பயிருக்கான உரச்செலவு குறைகிறது. நெல் அறுவடையான பின்பு, பயறு சாகுபடி செய்யப்படுவதால், நிலம் தரிசாக இல்லாமல், நிலப்பயன்பாடாகிறது.

நெல்லுக்குப் பின், பயறு சாகுபடி செய்வதால், கிடைக்கும் சாதகங்கள், விவசாயிகளுக்கு விளக்கிக்கூற, மாவட்ட அளவிலும், வட்டார, குறு வட்டார மற்றும் கிராம அளவில், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் விதைக் கிராம திட்டங்களில், மானியத்தில் உளுந்து விதைகள் பெறும் விவசாயிகள், சம்பா நெல் சாகுபடிக்குப் பின், உளுந்து விதைகள் விதைப்பு செய்து, பயன் பெறுமாறு, புதுக்கோட்டை மாவட்ட விவசாய பெருமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார் கள். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்  இணை இயக்குநர் மா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top