Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

ஜூன் 30 ல் தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர்

ஜூன் 30 ல் விவசாயிகள் குறை கேட்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  30.06.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10. மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்டவளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டஅரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதியதொழில்நுட்பங்கள் குறித்துதிட்டவிளக்கங்கள் அளிக்கப்படஉள்ளது. மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாயசங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை.

வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம்  போன்ற விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாயசங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9. மணிமுதல் 10. மணிவரை கணினியில் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறது.

விவசாயிகள் அளிக்கும்  கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்துஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, விவசாயசங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துகளை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெற்றிடுமாறு மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top