Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

மேக்கேதாட்டு அணை விவகாரம்: தில்லியிலுள்ள குடியரசுத்தலைவர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்- பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

விவசாயிகள் சங்கம்

தமிழககாவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலர் பி.ஆர்.பாண்டியன்

மேகதாது அணையை தடுத்து நிறுத்த மறுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும், தில்லி குடியரசு தலைவர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்  என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் பி.ஆர்.பாண்டியன  அறிவித்துள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமை  வகித்தார்.. கூட்டத்தில் பங்கேற்ற  பொதுச் செயலாளர் பிஆர் பாண்டியன்  செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

காவிரி பிரச்னை காவிரி மேலாண்மை ஆணையம் அமைக் கப்பட்டு தமிழ்நாட்டில் ஒத்த கருத்தோடு உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற் றுள்ள முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்  உள்ளாட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிகாரமில்லாத காவிரி மேலாண்மை ஆணையம் என குறிப்பிட்டுள்ளார். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு ஒத்த கருத்தோடு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்றுக் கொண்டோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள கருத்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது.

அதிகாரம் இல்லாத ஆணையம் என்றால் மாற்று குறித்து தமிழக முதலமைச்சர் தெளிவுபடுத்த முன்வரவேண்டும்.. இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசும் ரூ 1000 கோடி ஒதுக்கி மேக்கே தாட்டு அணை கட்டுமான பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சட்டவிரோதம் என அறிவித்திட வேண்டும்.

மேலும் ஆணையமே உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்து, மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். மேகதாது அணையை தடுத்து நிறுத்த மறுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும், தில்லி குடியரசு தலைவர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழக காவிரி உரிமையை மீட்பதற்கு தமிழகத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட வைத்திட தமிழக அரசு அனைத்துக் கட்சிகள், விவசாயிகளை ஒருங்கிணைத்து தீவிர போராட்டங்களில் களமிறங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார் பி.ஆர். பாண்டியன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top