Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

அம்பேத்கர் பிறந்தநாள்: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

புதுக்கோட்டை

அம்பேத்கர் பிறந்தநாள்-தமிழ்வளர்ச்சித்துறை போட்டிகள்

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே (19.04.2022)  பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி  தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை
அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப் போட்டி

புதுக்கோட்டை அரசு முன்மாதிரிமேல்நிலைப் பள்ளி மாணவி பா.கீர்த்திகா முதலிடத் தையும், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ச.துவாரகா இரண்டாம் இடத்தையும், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி மாணவர் ச.நாகராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசினை மணமேல்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.ராஜஸ்ரீ, பாலன்நகர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி எஸ். ஜெனட்மேரி ஆகியோர் வென்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவி இரா.பபிதா முதலாம் இடத்தையும், மா மன்னர் கல்லூரி மாணவி செ.ஜோதி இரண்டாம் இடத்தையும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மாணவி ஜனனி செந்தில்குமார் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.
முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000, சிறப்புப்பரிசாக ரூ.2000 ரொக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top