Close
செப்டம்பர் 19, 2024 11:11 மணி

புதுக்கோட்டை அரசுப்பள்ளியில் ஜோமன் பவுண்டேஷன் சார்பில் கலந்துரையாடல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையை சேர்ந்த ஜோமன் பவுண்டேசன் நிறுவனர் டெய்சிராணி

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலை பள்ளியில்  ஜோமன் பவுண்டேஷன் சார்பாக தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டையை சேர்ந்த ஜோமன் பவுண்டேசன் நிறுவனர் டெய்சிராணி  கலந்து கொண்டு பேசியதாவது: மாணவர்களுடன் பேச நாங்கள் தயாராய் இருக்கிறோம். அரசு பள்ளி ஆசிரியர்கள் தயக்கமின்றி அழையுங்கள். இலவச விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை பயிற்சியளிக்கிறோம்.

இப்போதிருக்கும் மாணவர்களின் மனநிலைக்கு மாதம் 3, 4 முறையேனும் இந்த நிகழ்விற்கு நேரம் ஒதுக்கவேண்டும். அந்த நேரங்கள்தான் அவர்கள் படிக்கும் படிப்பிற்கான ஆதாரங்கள்.

மாற வேண்டியது மாணவர்கள் மட்டுமல்ல. ஆசிரியர்களும் பெற்றோர்களும் தான். புத்தகத்திலுள்ள வரிகள் மட்டும் பாடங்களல்ல. ஆசிரியர்களே மாணவர்களுக்கு முதல் முன்மாதிரி. உங்களில் இருந்து மாற்றத்தை ஆரம்பித்து மாணவர்களுக்கு கொண்டு செல்லுங்கள் என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top