Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

கவிதைப் பக்கம்… நீதி…

கவிதைப்பக்கம்

நீதி...

கவிதைப்பக்கம்… நீதி… மருத்துவர் மு. பெரியசாமி..

நீதி…

நேர்மையை
கூர்மை செய்வதற்காகவே
வாய்மை
வக்காலத்து வாங்குகிறது!

புனிதத்தை
போர்வையாக்கி கொள்ளவே
மனிதம்
மாண்புகளை செய்கிறது!

நன்மை
நடக்கவேண்டும் என்பதற்காகவே
உண்மை
உயிர் வாழ்கிறது!

அறத்தை
வரமாக்கிக்கொள்ளவே
அன்பு
அமைதி வடிவாகிறது!

நீதி
நிலைக்கவேண்டும் என்பதற்காகவே
போதி
இன்றும்
புத்தனோடு வாழ்கிறது!

ஆக்கம்: மரு.மு.பெரியசாமி,  புதுக்கோட்டை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top