Close
செப்டம்பர் 20, 2024 1:45 காலை

புதுக்கோட்டையில் முனைவர் நா. விஜயரகுநாதன் எழுதிய “உடலை நலமாக்கும் யோகா” நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை

முனைவர் விஜயரகுநாதனின் நூல் வெளியீட்டு விழா இன்று

மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி உடல் கல்வி  இயக்குநர் (ஓய்வு) முனைவர் நா. விஜயரகுநாதன் எழுதிய “உடலை நலமாக்கும் யோகா”  எனும் அவது ஏழாவது நூல் வெளியீட்டு விழா   (19.06.2028) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில்  புதுக்கோட்டை  அலுவலர் மன்றத்தில் நடைபெறுகிறது.

விழாவுக்கு புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர்  திலகவதி செந்தில்  தலைமை வகிக்கிறார்.

அலுவலர் மன்றத் தலைவர் வி. ராமு, துணைத்தலைவர் ஏ. முத்துக்கருப்பன்,  செயலர்  கே. அம்பிகாபதி,ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாநிலங்களவை திமுக எம்பி எம்.எம். அப்துல்லா, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

புதுக்கோட்டை எம்எல்ஏ  டாக்டர் வை. முத்துராஜா நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்.

டி. சந்திரசேகர், பேராசிரியர்(ஓய்வு)பொ.அண்ணாமலை, வழக்குரைஞர் என்.சி. ராதாகிருஷ்ணன், கே. பாண்டியன் (மின்வாரியம்-ஓய்வு) , நா. விஜயகுமார்(எல்ஐசி),  பாரதிதாசன் பல்கலைக்கழக உடல்கல்வி  இயக்குநர் முனைவர் ஏ.பழனிச்சாமி  ஆகியோர் வாழ்த்துகின்றனர்.

இலக்கி விமர்சகர் முனைவர் ந. முருகேசபாண்டியன், நூல் குறித்து  கருத்துரையாற்றுகிறார்.  நூலாசிரியர்  முனைவர்.நா.விஜயரெகுநாதன் ஏற்புரையாற்றுகிறார்.

டாக்டர் கே.ஏ. ரமேஷ்  வரவேற்புரையும்,  விரிவுரைாளர் சி. செல்வராஜ் நன்றியுரையும் ஆற்றுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top