Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

கந்தர்வகோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் புத்தகத்திருவிழா பணிகள் தொடக்கம் ஒருங்கிணைப்புக் குழுவினர்

புதுக்கோட்டை

புத்தகத் திருவிழா பணிகளை தொடக்கி வைத்த கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கான கந்தர்வகோட்டை ஒருங்கிணைப் புக் குழு கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமை வகித்தார். அனைவரையும் அறிவியல் இயக்க மாவட்ட இணை செயலாளர் கு.துரையரசன் வரவேற்றார்.

கடந்த ஆண்டு செய்த பணிகளையும் இந்த ஆண்டு நம் ஒன்றியத்தில் இருந்து அனைவரையும் கலந்து கொள்ள செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சட்ட மன்ற உறுப்பினர் பேசும்போது, இவ்வாண்டு அனைத்து பள்ளி கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து 10 நாள் சிறப்பாக பங்கேற்பது.

கல்வி அலுவலர்களுடன் இணைந்து திட்டமிட்டு ஒரு கிராமப்புற பள்ளிகளையும் விட்டுவிடாமல், அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் வாய்ப்புகளை உருவாக வேண்டும் என்றும் இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதில் அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டச் செயலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top