Close
அக்டோபர் 5, 2024 7:17 மணி

புத்தக வெளியீட்டு விழா…

புதுக்கோட்டை

எழுத்தாளர் வெங்கடேசனின் நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் ப.வெங்கடேசன் தொகுத்த “கவிஞர் ஜீவியுடன் சந்திப்பு” நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

புத்தகத்தை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் வெளியிட்டார். முதல் பிரதியை வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை

நிகழ்வில் தொகுப்பாசிரியர் ப.வெங்கடேசன் முன்னிலை வகித்தார், கவிஞர் புதுகைப்புதல்வன், ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கவிஞர் ஜி.வி. ஏற்புரை நிகழ்த்தினார். எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி.விமலா வரவேற்றார். நிறைவாக தொழில் நுட்ப அலுவலர் சி.பிரிட்டோ நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top