Close
ஜூன் 1, 2025 2:43 காலை

நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவக்கம்: 10 நாட்கள் நடைபெறுகிறது..!

நாமக்கல் புத்தகக்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் உமா பேசினார்.

நாமக்கல்:

தமிழக அரசின் சார்பில், நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் நூலகத்துறை இணைந்து நடத்தும் நாமக்கல் புத்தகத்திருவிழா, நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், நாளை பிப். 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.

தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறும். 80க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. தினசரி மாலை தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் வாங்குவேருக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.புத்தகத்திருவிழா துவக்க விழா நாளை 1ம் தேதி மாலை 6 மணிக்கு கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், லோக்சபா எம்.பி. மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, பபாசி தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு புத்தகத்திருவிழாவை துவக்கி வைத்துப் பேசுகிறார். டிஆர்ஓ சுமன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top