Close
செப்டம்பர் 20, 2024 5:39 காலை

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலையப் பகுதியில் நாளை(அக்.27) மின்தடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர் பகுதியில் நாளை மின்தடை

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின் நிலையப்பகுதிகளில்  வியாழக்கிழமை (27.10.2022)  மின் தடை ஏற்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை திருவப்பூர்  110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம்  செய்யப்படும் இராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர்,லெட்சுமி நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங் குளம், வல்லத்திராக்கோட்டை.

நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெணா விலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய  பகுதிகளில் 27.10.2022 வியாழக்கிழமை  காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறி யாளர்           (இயக்கலும்.  காத்தலும் – புதுக்கோட்டை  நகர்)  அ. சையது அகமது இஸ்மாயில்  தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top