Close
செப்டம்பர் 19, 2024 11:11 மணி

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையப் பகுதிகளில் நவ.16 மின் தடை

புதுக்கோட்டை

புதுகை சிப்காட் துணை மின்நிலையப் பகுதிகளில் நவ.16 -ல் மின்தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்   வரும்  16.11.2022 (புதன்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் தடை ஏற்படும் என  மின் வாரியம் அறிவித்துள்ளது.

சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும்  சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவுது மில், சிட்கோ தொழிற்பேட்டை (ரெங்கம்மாள் சத்திரம்), கே,கே.நகர். மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான் பட்டி, கிளியூர்,  மேலுார், அம்மன்பேட்டை வாகைப்பட்டி, உடையாண்டிபட்டி, இரும்பாளி.

சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர். செம்பாட்டூர். கேடயப்பட்டி, செட்டியா பட்டி. ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி வேப்பங்குடி பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர்.

அபிராமிநகர், சுவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், மச்சுவாடி, ஜீவா நகர் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் அன்று காலை 9.00 மணிமுதல், மாலை 4.00 மணி வரை  மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய புதுக்கோட்டை  உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும் காத்தலும், கிராமியம்) எஸ். கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top