புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் நோயாளியிடம் லஞ்சம் வாங்கியதான புகாரின்பேரில், அங்கு பணியாற்றி வந்த பெண் ஊழியரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மு. பூவதி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுப்பாட்டில் புதுகை வடக்கு இரண்டாம் வீதியில் ராணியார் மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு மருத்துவப் பணியாளராக பணியாற்றி வரும் மாரிக்கண்ணு என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரசவத்துக்காக தங்கியிருந்த நோயாளர் ஒருவரிடம் ரூ. 300 லஞ்சம் கேட்டு வாங்கியதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மு. பூவதிக்கு புகார் வந்தது.
இந்தப் புகார் மீது விசாரணை நடத்திய முதல்வர், அவரை பணி இடைநீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டார். குறிப்பிட்ட அந்த நபர் மீது ஏற்கெனவே இதுபோன்ற புகார்கள் வந்துதுறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா கவும் கூறப்படுகிறது.



