Close
செப்டம்பர் 20, 2024 1:42 காலை

கொங்கு நாட்டுத் தங்கம் ஈரோடு காசியண்ண கவுண்டர் மறைவு

ஈரோடு

ஈரோடு காளியண்ணன் கவுண்டர்

ஈரோடு ஏ.ஈ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் காசியண்ண கவுண்டர் ( 83) வயது மூப்பின் காரணமாக, ஏ.ஈடி. பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (17.1.2023)  காலமானார்.

தமிழக விவசாயிகளுடைய பல்வேறு பிரச்னைகளுக்கு பல ஆண்டுகளாக முன் நின்று போராடியவர். தன்னிடம் உதவி கேட்ட எந்த விவசாயிக்கும் இல்லையென்று கை விரித்தது கிடையாது. தன்னால் பயில முடியாத கல்வியை அனைவரும் பயில வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில்தான் கல்வி நிறுவனத்தை தொடங்கினார்.

கீழ்பவானி முறைநீர் பாசன சபை தலைவராகவும், ஈரோடு மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் பொருளாளரும் காசியண்ண கவுண்டர் இருந்தார்.

அவருடைய உடலுக்கு, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏ.ஈ.டி. கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளிக்கூட முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

காசியண்ண கவுண்டர் உடல் நல்லடக்கம் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ஏ.ஈ.டி. பள்ளிக்கூடம் அருகில் நடைபெற உள்ளதாக அவருடைய சகோதரி மகன் ஏ.ஈ.டி. மோகனா ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top