Close
செப்டம்பர் 20, 2024 3:37 காலை

புதுகை நகரின் சில பகுதிகளில் மார்ச் 9 ல் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் வியாழக்கிழமை (9.3.2022)  மின்தடை  அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை 110 / 22 நகரியம் துணை மின் நிலையத்தி லிருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கேவி அசோக் நகர் பீடரில்  உயரழுத்த மின் பாதையில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெறவுள்ளன.

இதன் காரணமாக புதுகை நகரியம் துணை மின்நிலையத்திலிருந்து  மின் வினியோகம் செய்யப்படும் 22 கேவி  அசோகர்நகர்  பிடரில் உள்ள சின்னப்பா  பூங்கா முதல்  அண்ணாசிலை வரை, மார்த்தாண்டபுரம், காந்திநகர். உசிலங்குளம், அய்யனார்புரம் ஆகிய பகுதிகளில்  வியாழக்கிழமை (9.3.2023காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி  வரை மின் விநியோகம் இருக்காது என புதுக்கோட்டை நகர் உதவி செயற் பொறியாளர் (இயக்கலும் & காத்தலும்) அ.சையது அகமது இஸ்மாயில் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top