Close
செப்டம்பர் 20, 2024 3:42 காலை

உடல்களை தானம் செய்த புதுக்கோட்டை தம்பதி… !

புதுக்கோட்டை

உடல்தானம் செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தம்பதி

கால்நடை துறையில் பணியாற்றிய செல்வராஜ் – செல்வி தம்பதியினர் 30.4.2023 -ஆம்  தேதி ஓய்வு பெற்றனர். இதையொட்டி நடைபெற்ற பணி நிறைவு விழாவில் செல்வராஜ் – செல்வி தம்பதியினர் தங்களுடைய இரண்டு மகள்களின் முழு சம்மதத்துடன், பாதிரியார்  மற்றும் உறவினர்கள் முன்னிலையில்  தங்களது உடல்களை தானம் செய்துள்ளனர் .

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு படிப்பதற்கு உதவியாக இருக்கும் என்று மனப்பூர்வமாக உடல் தானம் செய்வதாக அறிவித்துள் ளனர்.

உடல் உறுப்பு தானம், இரத்ததானம், கண்தானம் தாண்டி இன்று உடல்தானம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது மனித சமுதாயம்.  இந்நிகழ்வில்,  ஆனந்த யோகா பவுண்டேஷன் நிறுவனர் யோகா செல்வராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம், ஓயாத அலைகள் கண்ணன், புகைப்படக் கலைஞர் வெங்கடேஷ் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top