Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு:மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்  

புதுக்கோட்டை

கறம்பக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினர்

 தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு  மனித நேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம்,  கறம்பக்குடியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது சுலைமான் தலைமையில் சமீபத்தில் கேரளாவில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பை மீறி இந்த படம் திரையரங்கு களில் வெளியிட்டால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விடும்.  ஆகவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி துணை காவல் கண்காணிப் பாளர் தலைமையில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top