Close
செப்டம்பர் 20, 2024 4:07 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு: எஸ்பி அதிரடி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே எஸ்பி வந்திதாபாண்டே தலைமையில் நடந்த கள்ளசாராய வேட்டை

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதா பாண்டே  உத்தரவுப்படி மதுவிலக்கு கள்ளசாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ளசாராயம் விற்பனைதொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு மது வேட்டையில் கள்ள சாராய ஊரல் அழிக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு காவல் சரகம், கருக்காகுறிச்சி தெற்கு கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படையினருக்கு கள்ள சாராய ஊரல்கள் இருப்பதாக இன்று (16.05.2023-) கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேராக சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே முன்னிலையில்; 5 பேரல்களில் இருந்த சுமார் 500 லிட்டர் சாராய ஊறல்கள் சம்பவ இடத்திலேயே போலீஸாரால் அழிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top