Close
செப்டம்பர் 19, 2024 11:20 மணி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சதுரங்க போட்டி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் சதுரங்கப் போட்டி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு (ஜூலை.30) ஞாயிற்றுக்கிழமை  சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் குழு வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமான சிறப்பு போட்டியாக சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை       ( 30.7.2023)   முற்பகலில் நடத்தப்படுகிறது.

இப்போட்டி  புதுக்கோட்டை   நகர் மன்றத்தில் உள்ள  புத்தக விழா அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கும்.   இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் காலை 8. மணி முதல் 9.30 மணி வரை புத்தக விழா அரங்கில் பதிவு செய்ய வேண்டும்.  பங்கேற்கும் போட்டியாளர்கள் சதுரங்க அட்டைகள்  மற்றும் காய்கள் அவசியம் கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகத் திருவிழா மேடையில் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top