Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

கார் விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்: புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் இரங்கல்

புதுக்கோட்டை

மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் இரங்கல்

கார் கவிழ்ந்து உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளருக்கு  புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகை யாளர்  சங்கம்   இரங்கல் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட இரங்கல் செய்தி:
புதுக்கோட்டை
திருநெல்வேலி மாவட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சிக் குழுவினர் நேற்று (23.08.2023) மாலை சந்திரயான் நிலவில் இறங்கும் செய்திக்காக, திருவனந்தபுரம் சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி ஒளிப்பதிவாளர் சங்கர் (33) உயிரிழந்துள்ளார். நிருபர் உள்பட 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இளம் ஒளிப்பதிவாளர் சங்கர், துடிப்பான திறமையான பணியாளர். அவரது அகால மரணம் அதிர்ச்சியைத் தருகிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கி றோம்.
இறந்த சங்கரும் காயமடைந்த இதர 3 ஊடகவியலாளர்களும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்கள். நல வாரிய விதிகளின்படி அவர்களுக்கான உதவித் தொகைகளை உடனே நேரில் சென்று வழங்கிட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும்.
அத்துடன் கூடுதல் சிறப்பு நிதியை ஒதுக்கி வழங்கிடவும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துவதாக புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்க தலைவர் சு. மதியழகன்,  செயலாளர் சா. ஜெயப்பிரகாஷ், பொருளாளர் கே. சுரேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top