Close
ஜூலை 5, 2024 1:29 மணி

புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்ற விசாரணை: 119 வழக்குகளில் 2.15 கோடிக்கு தீர்வு

புதுக்கோட்டை

தீர்வளித்த புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி கே.பூர்ண ஜெய ஆனந்த்

புதுக்கோட்டையில் நடைபெற்ற  மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) விசாரணையில் 119 வழக்குகளில் ரூ.2.15 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படி, குடும்ப நல வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் லோக் (அதாலத்) சனிக்கிழமை (14.19.2823) புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றதிற்கு தலைமை வகித்து புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர்- முதன்மை மாவட்ட நீதிபதி கே.பூர்ண ஜெய ஆனந்த் பேசியதாவது:

இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 22,000-த்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அனைத்து வழக்குகளையும் ஒரே நேரத்தில் முக்கியத்துவம் கொடுத்து முடித்து விடமுடியாது காலவிரயமும் பொருள் விரயமும் தவிர்க்கப்பட வேண்டும். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. அந்த அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமரசமாக பேசினாலே வழக்குகள் எளிதில் தீர்மானிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். “சாட்சிக்காரர் காலில் விழுவதைவிட சண்டைக்காரர் காலில் விழுவதே மேல்” என்று முதுமொழி இருக்கிறது.

அதனடிப்படையில் தரப்பினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து தங்களது எதிர்த்தரப்பினர் களுடன் சமரசம் முற்பட்டாலே அவர்களுக்கிடையேயான அனைத்து பிரச்னைகளுக்கும் இறுதியாகவும் கமூகமாகவும் தீர்க்கப்பட்டு விடுகிறது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீர்வினால் மேல் முறையீடு இல்லாமல் வழக்கு இறுதி நிலையை அடைகிறது. நீதிமன்றக் கட்டணமும் திரும்பப் பெறப்படுகிறது என்று புதுக்கோட்டை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி கே.பூர்ண ஜெய ஆனந்த் தெரிவித்தார்.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நல நீதிமன்ற  நீதிபதி ஜெயந்தி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஐ.எம். வசந்தி, அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு மாவட்ட நீதிபதி ஏ.கே.பாபுலால், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலாளர் சார்பு நீதிபதி இ.ராஜேந்திர கண்ணன், முதன்மை சார்பு நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) எஸ். சசிகுமார், நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி எம்.ஜெயந்தி ஆகிய நீதிபதிகள் கொண்ட ஐந்து அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 11 அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது.

இதில், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள், குடும்பநல வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள்; உரிமை யியல் வழக்குகள், காசோலை மோசடி மற்றும் வங்கி வராக்கடன் வழக்குகள்என மொத்தம் 1,708 வழக்குகள் விசாரனைக்கு எடுக்கப்பட்டு அதில் 119 வழக்குக ளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ. 2,15,76,121 தொகைக்கான சமரச முடிவு ஏற்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top