Close
ஜூலை 7, 2024 10:27 காலை

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: புதுக்கோட்டையில் முன்னோட்ட கருத்தரங்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் முன்னோட்ட மாநாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக புதுக்கோட்டையில் முன்னோட்ட கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024 (Global Investor Meet 2024) 2024 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை
ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 (GIM 2024) மாவட்ட அளவிலான கருத்தரங்கம் (District Level Road show) 20.11.2023 ஆம் தேதி பிற்பகல் 3.மணியளவில் புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள ஹோட்டல் சாரதா கிராண்ட் கூட்ட அரங்கில்  நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்  தலைமையில் நடைபெறும்  கருத்தரங்கில் அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள்,  மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக திட்டங்கள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளது..

இக்கூட்டத்தில் உள்ளாட்சிப் பிரதி நிதிகள், தொழில் வணிக நிறுவன சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளை கூற உள்ளனர். தொழில் நிறுவனங்கள் தொடங்கவும் தொய்வின்றி நடத்துவதற்கு அரசின் நடைமுறைகள், அரசு தரும் ஆதரவுகள், தொழில்நுட்ப, நிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து உரிய ஆளுமைகள்,

வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உரை நிகழ்த்து கின்றனர். தொழில் துறையினர், வணிகர், தொழில் முனைவோர், கை வினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், ஆலோசகர்கள், கல்வி நிறுவன வழிகாட்டிகள், சுயதொழில் ஊக்குநர்கள், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top