Close
ஜூலை 4, 2024 4:44 மணி

போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெற்றவர்கள் மீது நடவடிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற வருமான வரி விழிப்புணர்வுக்கூட்டம்

வருமான வரி பிடித்தம் தொடர்பாகவும்,  போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெற்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரித் துறையினர் எச்சரித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருமான வரி துறை சார்பாக வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு கூட்டல்த்துக்கு  வருமான வரி கூடுதல் ஆணையர் நித்யா தலைமை வகித்தார். மாவட்ட கருவூல அதிகாரி ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்..

இதில், தஞ்சாவூர் வருமான வரி உதவி ஆணையர்  சீனிவாசன், வருமான வரி அதிகாரிகள்  சு. வில்விஜயன், ராஜசேகர்,  சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில், வருமான வரி பிடித்தம் தொடர்பாகவும்,  போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெற்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  அதற்கான தீர்வாக திருத்தப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட வருமான வரி படிவம் தாக்கல் செய்து தவறை திருத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தினர்.

இந்தத் தகவல்களை அனைத்து பணம் வரைதல் மற்றும் வழங்குதல் அதிகாரிகள் தங்கள் அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதில்,  புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்திற்கு உட்பட்ட பணம் வரைதல் மற்றும் வழங்குதல் அதிகாரிகள்  சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top