Close
ஜூலை 4, 2024 5:30 மணி

நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் மீதான கொலை வெறித்தாக்குதலைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள்

நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபுவை கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை கைது செய்ய கோரி புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முன்பாக புதுக்கோட்டை மாவட்ட அனைத்து தலைமை பத்திரிகை யாளர்கள் சங்கம் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபுவை கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை கைது செய்யக்கோரி தன்னை காப்பாற்ற காவல் துறையிடம் உதவி கேட்டும் அலட்சியப் போக்கை காட்டிய காவல்துறையின் போக்கை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். குண்டர்களின் கொலைவெறி தாக்குதலில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நேசபிரபுவின் மருத்துவ செலவுகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top