Close
மே 31, 2025 7:38 மணி

நில ஆவணங்களை நவீனமாயமாக்கும் நக்க்ஷா திட்டத்தில் காஞ்சியில் டிரோன் மூலம் நில அளவைப்பணி..!

டிரோன் மூலமாக நில அளவைப்பணிகள் தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்ட நகர நில ஆவணங்களை நவீன மாயமாக்கும் நக்க்ஷா திட்டத்தின் கீழ் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சியின் நில அளவைகளை ட்ரோன் மூலம் பதிவிடும் பணிகள் துவங்கி உள்ளது.

இந்தியா முழுவதும் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் உரையினை மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள திட்டமிட்டு அதற்காக நக்க்ஷா எனும் திட்டம் தயாரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அதன் கீழ் முதலாவதாக காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்வு செய்து அதற்கான பணிகள் துவங்க திட்டமிடப்பட்டு என்பது இடங்களில் இருந்து ட்ரோன் மூலம் நில அளவை பதிவு செய்யும் பணிகள் தேர்வு செய்யப்பட்டது.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அண்ணா காவல் அரங்கில் இருந்து முதலாவது நில அளவை பணியினை மாவட்ட நில அளவை அலுவலர்கள் குழு மற்றும் ட்ரோன் குழுவினர் துவக்கினர்.

இப்பணி ஒரு மாத காலம் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக இரண்டு குழுக்கள் பணியில் ஈடுபட உள்ளனர். ஓரு மணி நேரத்தில் 1200 சதுர கிலோ மீட்டர் நில அளவை பதிவு துல்லியமாக பதிவு செய்யும் .

வருங்காலத்தில் நகரில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு இப்பணி மிக உதவும் என தெரிய வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top