Close
செப்டம்பர் 20, 2024 3:33 காலை

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலைய விநியோகப் பகுதிகளில் (ஜூலை 4) மின்தடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரின் தெற்கு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெறும் பின்வரும் பகுதிகளில் திங்கள்கிழமை (4.7.2022)  காலை 9  மணி முதல்  பிற்பகல் 3  மணி வரையில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் (இயக்கலும் & காத்தலும் / நகர்) அ. சையது அகமது இஸ்மாயில் வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை திருவப்பூர் (110/22-கே.வி) துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் இராஜகோபாலபுரம். கம்பன்நகர், பெரியார் நகர், பூங்கா நகர் கூடல் நகர், லெட்சுமி நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர் , கவிநாடு, அகரப்பட்டி.

பெருமாநாடு. திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நற்சாந்துப்பட்டி, நமனசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி,  கடையக்குடி, லெனாவிலக்கு,  எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில்  04.07.2022 (திங்கள்கிழமை) காலை 09.00 மணி முதல் பிற்பகல்  03:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top