Close
செப்டம்பர் 20, 2024 5:55 காலை

சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக புகார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவித்த மகளிர்

சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக புகார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சுய உதவிக்குழுப் பெண்களிடம் ரூபாய் 50 லட்சம் வரை மோசடி செய்துள்ள பெண்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நச்சாந்துப்பட்டி யைச் சேர்ந்த லெட்சுமணன் மனைவி மைதிலி(38). இவர் அருகே உள்ள ஒச்சம்பட்டி, பிராமணப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழுப் பெண்கள் பெற்ற கடன் தொகை யை பல்வேறு ஆசைவார்த்தைகளை கூறி, தனித்தனியாகப் பேசி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப் பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேற்படி பெண்ணிடம் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேயிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்தனர். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் குற்றப்பிரிவுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top