நாமக்கல் :
புதுச்சத்திரம் அருகே மினி லாரி டிரைவருடன் ஏற்பட்ட தகராறில், தனியார் பஸ் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (45), இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு புதுச்சத்திரம் அடுத்த ஏளுர் அருகே டிரைவர் விஜய் பள்ளி பஸ்சை ஓட்டி வந்துகொண்டிருந்தார்.
அப்போது ஏளுர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர், ஏளூரில் ரோடு ஓரம் நிறுத்தியிருந்து நிறுத்திய மினி சரக்கு லாரியை இயக்கியுள்ளார். இதில் இரு வாகனமும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் டிரைவர்கள் விஜய், அரவிந்த் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி பஸ்சில் இருந்து கீழே இறங்கி வந்த விஜய்யை, அரவிந்த் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து போய் கீழே விழுந்த, விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் அரவிந்தை அங்குள்ள பொதுமக்கள் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விஜய்யின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்த்து வந்து, விஜய்யின் சடலத்தை ரோட்டில் போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் ஏ.எஸ்.பி ஆகாஷ் ஜோஷி உள்ளிட்ட போலீசார் விஜய்யின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்து நாமக்கல் ஆர்டிஓ சாந்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் தனியார் பள்ளி பஸ் டிரைவரை தாக்கி கொலை செய்த விஜய்யை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




