Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

அத்தாணி அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு சிறந்த சேவைக்காக கல்வித்துறை பாராட்டு

புதுக்கோட்டை

சிறப்பாக பணியாற்றியதற்காக அத்தாணி அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் சேகருக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி

அத்தாணி அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு சிறந்த சேவைக்காக கல்வித்துறையின் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021 -22 ஆம் கல்வியாண்டில் சு.சுவேதா என்ற மாணவி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

2021-22 -ஆம் கல்வியாண்டில் தலைமையாசிரியராக சிறப்பாக பணியாற்றியமைக்காக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கா. சேகர் அவர்களை பாராட்டி, தமிழ்நாடு அரசு பாராட்டு சான்றிதழும், பள்ளி உள்கட்டமைப்பு வசதி மற்றும் பராமரிப்பிற்காக ரூபாய் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு  அரசாணையும் தமிழ்நாடு அரசு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பாக வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை
பாராட்டு சான்றிதழ்

சென்னையில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி,   அத்தாணி பள்ளி தலைமை யாசிரியர் கா. சேகருக்குபாராட்டுச் சான்றித ழை வழங்கி வாழ்த்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top