Close
செப்டம்பர் 19, 2024 11:25 மணி

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 21,  22 – தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம்

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி

விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21,  22 -ஆகிய தேதிகளில் கல்லூரி மாணவர்களின் கல்விக் கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள தகவல்::  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தின் முன்னோடி வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில், சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது.

வரும் 21-ஆம் தேதி (புதன் கிழமை), 22 -ஆம் தேதி (வியாழன் கிழமை) ஆகிய 2 நாட்களிலும், காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரையில் சிறப்பு முகாம் நடைபெறகிறது.

இந்த சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் சாத்தூர் பகுதி மாணவர்களுக்காக சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, அருப்புக்கோட்டை ஸ்ரீசவுடாம்பிகா பொறியியல் கல்லூரி, ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி, திருவில்லிபுத்தூர் ஸ்ரீபாலகிருஷ்ணா கல்லூரி.

வத்திராயிருப்பு கலசலிங்கம் பல்கலைக்கழகம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி, நரிக்குடி மற்றும் திருச்சுழி மாணவர்களுக்கு திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியிலும் சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது.

கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதள முகவரியில் தங்களுடைய விண்ணப்பங் களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் நகல்களுடன் கல்விக்கடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top