Close
செப்டம்பர் 20, 2024 1:45 காலை

கல்லூரி மாணவிகள் நடத்திய விவசாயம் சார்ந்த ஓவியப்போட்டி

புதுக்கோட்டை

புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் சித்தன்னவாசலில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசலில் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் விவசாயம் சார்ந்த ஓவியப்போட்டியை பள்ளி மாணவர்களுக்க சனிக்கிழமை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் தங்கள் பணி அனுபவத் திட்டத்தின் ஒருபகுதியாக அன்னவாசலில் தங்கி விவசாயம் தொடர்பான களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அன்னவாசல் அருகே உள்ள சித்தன்ன வாசலில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவி களுக்கு விவசாயம் தொடர்பான ஓவியப்போட்டி கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்டது.

போட்டியை பள்ளித் தலைமை ஆசிரியர் வி.கே.சுவாமிநான் தொடங்கி வைத்தார். ‘விவசாயத்தின் அழகு’, ‘விவசாயத்தின் எதிர்காலம்’ ஆகிய தலைப்புகளில் மாணவ, மாணவிகள் வண்ண, வண்ண ஓவியங்களைத் தீட்டினர்.

சிற்பான ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. வழிகாட்டி ஆசிரியர் ஆயிஷா சித்திக்கா, பள்ளியின் ஓவிய ஆசிரியர் முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி வாழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top