Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

இளநிலை திறனறிவு தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி முதலிடம்

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளிமாணவிகே. ராகவிமாவட்டஅளவில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவி கே. ராகவியைமாவட்டஆட்சித்தலைவர் கவிதாராமு பாராட்டிசான்றிதழும் கோப்பையும் வழங்கினார்

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான இளநிலை திறனறிவு தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை.

புதுக்கோட்டைமாவட்டகல்விஅலுவலர் (தனியார்பள்ளிகள்) அந்தோணி அறிவிப்பின் படி புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கு இடையேயான ஒன்பதாம் வகுப்புமாணவர்களுக்கு திறனாய்வுதேர்வு நடத்தப்பட்டது. மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலிருந்தும் ஒருமாணவரை மாவட்டகல்விஅலுவலரே தேர்வுசெய்து இந்த திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வில் பொது அறிவுமற்றும் நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.  இந்ததேர்வில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிமாணவி கே. ராகவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

வெற்றிபெற்றபள்ளிமாணவி கே. ராகவியை, மாவட்டஆட்சித் தலைவர் கவிதாராமு மற்றும் மாவட்டகல்விஅலுவலர் அந்தோணி ஆகியோர்  பாராட்டி சான்றிதழும் சுழற் கோப் பையும் வழங்கி வாழ்த்தினர்.

திறனறிதேர்வில் முதலிடம்பெற்றுபள்ளி வந்த மாணவியை பள்ளிமுதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, பள்ளிஆலோசகர் அஞ்சலிதேவிதங்கம் மூர்த்தி,துணைமுதல்வர் குமாரவேல் மற்றும்  ஆசிரியர்கள் சித்திரைசெல்வி, ரவிக்குமார்உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள் வாழ்த்துக்களைதெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top