Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

மாநில அளவிலான சிலம்பப்போட்டி… புதுகை திருஇருதய பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

புதுக்கோட்டை

மாநில சிலம்பப் போட்டியில் வென்ற புதுகை திருஇருதய மகளிர் பள்ளி மாணவிகளை வாழ்த்தும் தாளாளார் மற்றும் தலைமைஆசிரியர்

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில்  2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாநில அளவிலான சிலம்பப் போட்டி அரியலூரில் நடைபெற்றது.

சிலம்பப் போட்டியில் திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயிலும் எ. சிந்துஜா மாநில அளவில் முதல் பரிசையும், எட்டாம் வகுப்பில் பயிலும் ஆர்.பூர்விகா ஸ்ரீ இரண்டாம் பரிசையும் பெற்றுப் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

பரிசு வென்ற  மாணவிகளையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களான  ச.ஆரோக்கிய தமிழ்ச்செல்வி மற்றும் சு. ராஜேஸ்வரி  ஆகியோரை பள்ளியில் நடைபெற்ற காலை வழிபாட்டில் தலைமையாசிரியை அருட்சகோதரி சி. ஜோஸ்பின் மேரி FBS, மற்றும் தாளாளர் அருட் சகோதரி அ. செசிலி FBS ஆகியோர்  வாழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top