Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

சர்வதேச அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்: வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை

சர்வதேச அபாகஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களை வாழ்த்துகிறார், பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி

12-வது சர்வதேச அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில்  புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

சென்னையில் உள்ள அபாகஸ் மற்றும் மென்டல் அரித்மெடிக் டீச்சர்ஸ் அசோஷியேசன் சார்பாக 12 -வது சர்வதேச அபாகஸ் போட்டியினை ஆன்-லைனில் நடத்தியது.

8 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில்  புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் மூன்று பிரிவுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் சர்ஜீத்பாபு, மோகித்கிஷோர், ஹேமசுதன், லோகித், ரம்யா, பவானி, உதயரினியா, சர்வேஸ்வரன், லோகமித்ரா ஆகியோர் சாம்பியன் ஆப்  சாம்பியன் பட்டமும், ஹரிணி சாம்பியன் பட்டமும், சஞ்சீத் பாபு டாப்பர் பட்டமும் வென்றனர்.

இப்போட்டியில் வென்று சான்றிதழும், பரிசும்  வென்ற  மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், அபாகஸ் பயிற்சியாளர் புவனேஸ்வரிபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top