Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில் கால்நடை மருத்துவ முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டியில் புஷகரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்

புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில்  திருமயம் தாலுகா, அரிமளம் ஒன்றியம், கே. புதுப்பட்டியில்  கால்நடை மருத்துவ முகாம் மற்றும் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி (பிப்.15) நடைபெற்றது.

கே. புதுப்பட்டியில் கால்நடை மருத்துவர் நிமலேசன் தலைமையில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாம்  திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஜான்சி, ஜெயந்தி, ஜிம்சிரேச்சல், கமலபிரியா, ஜெ.காவியா,  ம.காவியா, கார்த்திகா, கீர்த்தனா, வெ.கிருத்திகா, க. கிருத்திகா, பாரதி ஆகியோர் கலந்து   கால்நடை மருத்துவ முகாமை நடத்தினர்.

 முகாமில் கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி,சத்து மருந்து, கோழிக் காய்ச்சல் மருந்து மற்றும் பூச்சி மருந்துகள் மற்றும் குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது.கால்நடைகளுக்கு சினை ஊசி போடப்பட்டது.

இதையடுத்து  வெறிநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு முழக்கங்களுடன் மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top