Close
செப்டம்பர் 19, 2024 11:06 மணி

அரசு பள்ளிகளுக்கு மேஜை இருக்கைகள் வழங்கிய கோபி எம்எல்ஏ செங்கோட்டையன்

கோபிச்செட்டிபாளையம்

கோபி தொகுதி மேம்பாட்டு நிதியில் அரசு பள்ளிகளுக்கு மேஜை இருக்கை வழங்கிய எம்எல்ஏ- செங்கோட்டையன்

கோபி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் காசிபா ளையம் மற்றும் டி.ஜி.புதூர் அரசுப்பள்ளிகளுக்கு மேசையுடன் கூடிய இருக்கைகளை கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.ஜி.புதூர் மற்றும் காசிபாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகளுடன் கூடிய மேஜை வழங்க வேண்டுமென பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையினை ஏற்று இரண்டு பள்ளிகளுக்கும் தலா ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 20 இருக்கைகளுடன் கூடிய மேஜையினை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலி ருந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து இவ்விரு பள்ளிகளுக்கும் மேஜையுடன் கூடிய இருக்கைகளை வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டை யன்  கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மேஜை இருக்கைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி , முன்னாள் எம்பி சத்யபாமா , யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், எம்ஜிஆர் மன்றம் அருள்ராமசந்திரன் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top