Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் நாள் விழா

புதுக்கோட்டை

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடந்த மகளிர் நாள் விழா

புதுக்கோட்டை, திருவரங்குளம், வேப்பங்குடி புஷ்கரம் வேளாண்அறிவியல் கல்லூரியில் மகளிர் தினவிழா  கல்லூரி வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் செயலாளர் எம்.  ராஜாராம் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை துணைக்காவல் கண்காணிப் பாளர்  ஜி. ராகவி  கலந்து கொண்டு பேசுகையில், மகளிரின் பெருமைபற்றியும், மாணவிகள் தங்களைச்சுற்றி நடக்கும் தீமைகள் குறித்த  விழிப்புணர்வையும், அவற்றை சமாளிக்கும் திறனுள்ளவர்களாக  உருவெடுக்க வேண்டுமென வும்  குறிப்பிட்டார்.

கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வி. சாந்தி (நுண்ணுயிரியல் துறை) வரவேற்றார். ஆர். சண்முகப்பிரியா (நானோ தொழில்நுட்பவியல்துறை) நன்றி கூறினார். மகளிர் தினவிழாவில் கல்லூரியின் மாணவ, மாணவிகள் மற்றும் இருபால் பேராசிரியரியரிகள் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவுற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top