Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

புதுக்கோட்டை  வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்  கல்லூரியில் ஆண்டு விழா      

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழா

புதுக்கோட்டை  கைக்குறிச்சி  வெங்கடேஸ்வரா பாலிடெக் னிக்  கல்லூரியில் ஆண்டு விழா  சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை  கைக்குறிச்சி  வெங்கடேஸ்வரா பாலிடெக் னிக்  கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு,  கல்லூரி செயலாளர் பி.கருப்பையா  தலைமை வகித்தார். பொருளாளர்    கவிஞர் ஆர்.எம்.வீ. கதிரேசன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜீவானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார், அறங்காவலர் குழு உறுப்பினர் கே.ராஜகோபாலன், கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர்எம். இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

புதுக்கோட்டை
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா

திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ந.விஜயசுந்தரி சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் வாரியத் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஆசிரியர்கள், அலுவலர்க ளுக்கு நினைவு பரிசு  சார்பில் வழங்கப்பட்டது.

நிகழ்வில் 450 -க்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோர் களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பி.திருமலை அரசன், நா.விக்னேஷ்வரன் தலைமையில் அலுவலர்களும் மாணவர் களும்  செய்திருந்தனர். நிறைவாக முதலாமாண்டு துறைத் தலைவர் நா.விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top