Close
செப்டம்பர் 20, 2024 1:37 காலை

புதுக்கோட்டை யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் ஆண்டு விழா

புதுக்கோட்டை

யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பட்டமளித்த பள்ளியின் தாளாளர் கவிஞர் கதிரேசன்

புதுக்கோட்டை யூரோ கிட்ஸ் மழலையர்   பள்ளியில். ஆண்டு விழா விமரிசையாக  நடைபெற்றது.                                                                                                                                                                                            புதுக்கோட்டை மறைமலை நகரில் உள்ள    யூரோ கிட்ஸ் மழலையர்   பள்ளியின் ஆண்டு விழா  குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் கவிஞர்  ஆர்.எம்.வீ. கதிரேசன் தலைமை வகித்தார். பள்ளியின்  ஆலோசகர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.பள்ளியின் சென்டர் ஹெட் தேவி கீர்த்தனா அனைவரையும்  வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் பா. புவனேஸ்வரி, பள்ளி மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும்  வழங்கி பேசினார்.

புதுக்கோட்டை
யூரோ கிட்ஸ் பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மழலையர்

இதையொட்டி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற் றது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன்  கலந்து கொண்டு  திறமைக ளை வெளிப்படுத்தி நடனம்  ஆடியதை பெற்றோர்கள் உள்பட அனைவரும் மகிழ்ச்சியுடன் கைதட்டி  ஊக்கமளித்தனர்.

நிகழ்வில்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா  பள்ளி முதல்வர்  கவிஞர் தங்கம்மூர்த்தி, வாசகர் பேரவை செயலாளர்  எஸ். விஸ்வநாதன்,  கவிஞர் பீர்முகமது,    வழக்கறிஞர்  ராமநாதன்,  கோட்டையூர் கவி, கல்லூரி பேராசிரியர்  உமா ,   யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளி பெற்றோர்கள்,  சமூக ஆர்வலர்கள்  உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர். விழா  ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள்  செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top