Close
செப்டம்பர் 20, 2024 6:22 காலை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

புதுக்கோட்டை

அரியாணிப்பட்டியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவில் மாணவ, மாணவிகள் ஒரிகாமி செயல்பாடுகள் மூலம் தொப்பி செய்து அணிந்திருந்தனர்.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவை ஊராட்சி மன்ற தலைவி வினோதா, அரியாணிப்பட்டியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி ராதிகா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இல்லம் தேடி கல்வி மைய த்தில் நடைபெறும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தெய்வீக செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, கணித புதிர்கள், ஓரிகாமி மூலம் தொப்பி செய்தல் , படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை மாணவர்களுக்கு செய்து காண்பித்திருந்தனர்.

ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவை பார்வையிட்ட இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது:

மாணவர்கள் கோடைகாலத்தில் உள்ள விடுமுறை நாட்களில் உங்கள் ஊரில் உள்ள நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை வாசிக்க வேண்டும். ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய அறிவியல் சோதனைகள் மூலம் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதற்கான வாய்ப்புகளை இல்லம் தேடிக் கல்வி மையம் கோடை காலத்தில் வழங்கிறது. மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க தன்னார்வலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இல்லம் தேடி கல்வி செயலியில் எல்.கே.ஜி யு.கே.ஜி ஒன்றாம் வகுப்பு புதிய சேர்க்கும் மாணவர்கள் விபரங்களை பதிவேற்ற வேண்டும் என்றார் அவர்.

இந்நிகழ்வில் புது நகர் நூலகர்கள் வெங்கடாசலம்,மணிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தன்னார்வலர்கள் கோடிஸ்வரி, அஸ்வினி முத்துலெட்சுமி மதுபாலா வீரதிலகம், அரியாணிப்பட்டி தன்னார்வலர்கள் காயத்ரி, ஹேமா, மகேஷ்வரி, புவனேஸ்வரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top