Close
செப்டம்பர் 20, 2024 5:38 காலை

ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் கல்வி துறையுடன் இணைப்பு

தமிழ்நாடு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பு

வரும் கல்வி ஆண்டிலேயே பள்ளிக் கல்வி துறையுடன் இந்த இணைப்பு நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத் துறை ஹிந்து சமய அறநிலையதுறை வனத்துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு துறையும் மேற்கொண்டுள்ளது.

இந்த வரிசையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1138 பள்ளிகள் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிக் கல்வி துறையில் இணைக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத் துறை அறிவித்துள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள் தொகுப்பூதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஆதிதிராவிட நலத் துறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அதன் இயக்குநர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணி நிறைவடைந்ததும், அனைத்து பள்ளிகளிலும் தேவையான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். இதர பல்வேறு வசதிகளும் செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top