Close
செப்டம்பர் 19, 2024 11:20 மணி

புதுகை புஷ்கரம் வேளாண் கல்லூரியில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை

புஷ்கரம் வேளாண் கல்லூரியில் நடைபெற்ற ஐஏஎஸ்.தேர்வு பயிற்சி முகாம்

புதுக்கோட்டையில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய பயிற்சித் திட்ட வகுப்பு கல்லூரி வளாகத்தில் 25.05.2023 அன்று  நடைபெற்றது.
புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில் உதவிப் பேராசிரியர் (பூச்சியியல் துறை),   வினோத் குமார்  மற்றும் உதவிப் பேராசிரியர் (வேளாண் விரிவாக்கத் துறை)   சு. பிரபு   (வேளாண் விரிவாக்கத் துறை) உதவிப் பேராசிரியர் ராஜகுரு ஆகியோர் நிகழ்ச்சியைத்  தொடக்கி வைத்தனர்.

இந்த பயிற்சி வகுப்பிற்கு சங்கர் ஐஏஎஸ்  அகாடமியின் தலைவர் சந்திரசேகர், யுக்தியாளர் ரமேஷ் ஆதித்யா  மற்றும் திருச்சி கிளையின் தலைவர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு நிறுவனத்தின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி விளக்கி மாணவர்களுக்கு எதிர்காலத் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் 100- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், கல்லூரி பேராசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இறுதியாக சு. பிரபு  நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top