Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை

10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை வாழ்த்துகிறார், கவிஞர் தங்கம் மூர்த்தி

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  (15.06.2023) வியாழக்கிழமை காலையில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர்  சுசரிதா  தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி  கலந்து கொண்டு மாணவிகள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை  வாழ்த்தி  பேசியதாவது:

மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியபடி நடந்தால் வாழ்வில் நிச்சயமாக வெற்றி பெற இயலும்.அரசு பள்ளிகளில் சாதனை புரிந்த மாணவர்களைப் போல ஒவ்வொருவரும் வரவேண்டும். இக்கால சாதனையாளர்கள் பெண்களே,  நீங்களும் சாதனையாளர்களாக ஆக வேண்டும். என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அஞ்சலி தேவி தங்கம் மூர்த்தி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக ளுக்கு பரிசுத் தொகை மற்றும் புத்தகங்களை  நினைவுப் பரிசாக  வழங்கி வாழ்த்தினார்.

புதுக்கோட்டை
சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பாராட்டு பெற்ற மாணவிகள்

பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் ச.ஆஷிகாபர்வீன், ச.சுபிக்ஷா, கா.மகதிஸ்ரீ பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவிகள் ஐ.தேவதர்ஷினி, பொ.வைஷ்ணவி, இரண்டாம் இடம் கு.அருண் ஸ்ரீ. ஆசிரியை கீதா வரவேற்றார். பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் பரமசிவம் நன்றி கூறினார். நிகழ்வில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top