Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

கோபி தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ளிகளுக்கு மேஜை இருக்கை வழங்கல்

ஈரோடு

கோபி தொகுதியிலுள்ள அரசுப்பள்ளிக்கு மேஜை இருக்கை வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ

ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் குள்ளம் பாளையம் அரசுப்பள்ளிகளுக்கு மேசையுடன் கூடிய இருக்கைகளை கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான 20 இருக்கைகளுடன் கூடிய மேஜையினை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலி ருந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது.

இதனையடுத்து பள்ளிக்குமேஜையுடன் கூடிய இருக்கைகளை வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மேஜை இருக்கைகளை வழங்கி சிறப்புரை யாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் , முன்னாள் எம்பி சத்யபாமா , யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், நகர செயலாளர் பிரினியோ கணேஷ் ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், எம்ஜிஆர் மன்றம் அருள்ராமசந்திரன், வழக்கறிஞர் வேலுமணி உள்பட அதிமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top